தூங்க மறந்த நேரத்தில்.

22 ஆகஸ்ட் 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

கவிதை பூக்களால் ஒரு தோட்டம்
பொய்த்த வானமாய் உன் பிரிவு
காத்திருக்கும் பூமியாய் என் கண்கள்
தூரத்து மேகமாய் உன் சிரிப்பு !..

கொட்டி செல்லும் மழையால்
மேகம் ஒன்றும் குறைவதில்லை
இதழில் பட்ட ஒரு துளியை
பூக்கள் என்றும் மறப்பதில்லை !..

ஒரு முறை சிரித்துவிட்டு போ !..

காதல் பூக்கள் மலர்வது
காமன் காலடி செல்லத்தான்
காலில் மிதித்து பூக்களை
கல்லறைக்கு அனுப்பாதே !..

காதல் வசப்படும் !
காதல் வசப்படும் !
காதல் வசப்படும் !
புலம்பும் மனது !..

என்ன சொல்லி தூங்க வைப்பேன் ?

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.