தூங்க மறந்த நேரத்தில்.

22 ஆகஸ்ட் 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

கவிதை பூக்களால் ஒரு தோட்டம்
பொய்த்த வானமாய் உன் பிரிவு
காத்திருக்கும் பூமியாய் என் கண்கள்
தூரத்து மேகமாய் உன் சிரிப்பு !..

கொட்டி செல்லும் மழையால்
மேகம் ஒன்றும் குறைவதில்லை
இதழில் பட்ட ஒரு துளியை
பூக்கள் என்றும் மறப்பதில்லை !..

ஒரு முறை சிரித்துவிட்டு போ !..

காதல் பூக்கள் மலர்வது
காமன் காலடி செல்லத்தான்
காலில் மிதித்து பூக்களை
கல்லறைக்கு அனுப்பாதே !..

காதல் வசப்படும் !
காதல் வசப்படும் !
காதல் வசப்படும் !
புலம்பும் மனது !..

என்ன சொல்லி தூங்க வைப்பேன் ?

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.