என்னுயிர் தோழிக்கு.

4 செப்டம்பர் 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

வெள்ளி மழையில் தங்கச்சிலை
யாரை நினைத்து நீராடுதோ ?
நனைத்த துளிகள் மோட்சம் பெற்று
பூமி பந்தை சூடாக்குதோ ?

காதல் வேள்வி செய்யும் பெண்ணின்
இதழும் தேன்துளி சுரக்குதோ ?
பொன்வண்டை தேடி தேடி - இந்த
பூவும் உறக்கம் தொலைத்ததோ ?

பருவம் வந்தால் பூப்பூக்கும்
சாய்ந்து உறங்க துணை கேட்கும்
வாடும் போதும் வாசந்தரும்
பூங்கொடியும் நீயும் ஒன்றல்லவோ !..

முக்கனியில் ஒன்றாய் இருந்தாலும்
கனிந்தபின் தான் கிளி வருமே !
காதல் கூடும் வேளை வரும்
அதுவரை கொஞ்சம் பொறு மனமே !!!…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  வளையொலி  |  Blog

பொதுவுடைமை @ 2009.