பிரிவறியேன்.

1 ஜனவரி 2019

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

பால்வெளியும் அவள் மடியாய்
வெண்ணிலவும் அவள் அடியாய்

விண்மீனும் அவள் விழியாய்
செந்தேனும் அவள் மொழியாய்

புல்வெளியும் அவள் உடையாய்
பூங்காற்றும் அவள் நடையாய்

கவிமொழியும் அவள் இனமாய்
பனிப்பொழிவும் அவள் தனமாய்

செங்கதிரும் அவள் சினமாய்
இளவெயிலும் அவள் குணமாய்

என்னுலகில் உய்த்திருக்க…

பிரிவறியேன் பேதையே - என்
குளிரிரவு கோதையே!

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  வளையொலி  |  Blog

பொதுவுடைமை @ 2009.