சிறகுகள் முளைக்கட்டும்

11 ஜூன் 2020

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

பரந்த வானில்
விரிந்த சிறகில்
பிறந்த கவியில்
வளர்ந்த உறவில்
புதைந்த நொடிகள்
புதையல் என்பேன்.

கலைந்த கனவில்
உடைந்த மனதில்
சிதைந்த உலகில்
தொலைந்த வழியில்
மறந்த நொடிகள்
மரணம் என்பேன்.

கோபங்கள் போதும்
கொஞ்சல்கள் வேண்டும்
வாதங்கள் போதும்
வாஞ்சனைகள் வேண்டும்
மோதல்கள் போதும்
மோகங்கள் வேண்டும்
சோகங்கள் போதும்
சொர்க்கங்கள் வேண்டும்

சிறகுகள் முளைக்கட்டும்
சிறுவானில் சேர்ந்திருப்போம்
மறுவாழ்வு உள்ளதெனில்
மீண்டுமதில் மகிழ்ந்திருப்போம்.

வா !!!

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.