சிறகுகள் முளைக்கட்டும்

11 ஜூன் 2020

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

பரந்த வானில்
விரிந்த சிறகில்
பிறந்த கவியில்
வளர்ந்த உறவில்
புதைந்த நொடிகள்
புதையல் என்பேன்.

கலைந்த கனவில்
உடைந்த மனதில்
சிதைந்த உலகில்
தொலைந்த வழியில்
மறந்த நொடிகள்
மரணம் என்பேன்.

கோபங்கள் போதும்
கொஞ்சல்கள் வேண்டும்
வாதங்கள் போதும்
வாஞ்சனைகள் வேண்டும்
மோதல்கள் போதும்
மோகங்கள் வேண்டும்
சோகங்கள் போதும்
சொர்க்கங்கள் வேண்டும்

சிறகுகள் முளைக்கட்டும்
சிறுவானில் சேர்ந்திருப்போம்
மறுவாழ்வு உள்ளதெனில்
மீண்டுமதில் மகிழ்ந்திருப்போம்.

வா !!!

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.