மீண்டும் மலர்ந்தது.

11 டிசம்பர் 2013

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

முன்னிரவு நேரம் …
சில்லென்ற மழைச்சாரல் …
மெலிதான மண்வாசனை …
தெருவோர மரங்களின் மௌனம் …
மஞ்சள் வெயில் உமிழும் விளக்குகள் …

யாருமற்ற சாலையொன்றில்
இருவருக்காக ஒரு தேநீர் கடை …

இதமான தேநீருடன்
சுகமாக கதைகள் பேச …

தினம் பார்த்த பூமுகம்
புதிதாக பார்வை வீச …

மிதமான குளிரிரவில்
மெதுவாக மெதுவாக

மீண்டும் மலர்ந்தது
மறந்துவிட்ட நம் காதல் !!!

பிடித்திருந்தது …
புரிந்தது …

குறிக்கோளின்றி சிலநாள்
இருத்தலும் நலமே !!!

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.