உன்னுடன் பேசு
நிறைய பேசு
சத்தம் போட்டு பேசு
கேட்பவர்களை கவனியாதே
பேச்சு உனக்காக
பேசிக்கொண்டேயிரு
வார்த்தைகள் தீரும்வரை
எஞ்சிருப்பது நீ மட்டும்
மௌனமாய், மோனமாய்
உணர்ந்துக்கொள்வாய்…
உண்மையென ஒன்றுமில்லை
உண்மையில் ஒன்றுமில்லை
உணரத்தெரிந்தால் வாழ்வதெளிது
அலை மேல் இறகு !