Thursday, August 18, 2011

ஒரு கவிதையின் பயணம் !...


கம்பனும் தாமரையும்
பயணித்த பாதை தான் !..
உன் மனமும் என் மனமும்
ஒருமித்த பாதை தான் !..
நீ பேசும் பேச்சுக்கே
பூ பூத்த பாதை தான் !..
செந்தமிழில் நீ பாட
தேன் சுரக்கும் பாதை தான் !..

மழைத்துளிக்கு காத்திருந்தேன்
கவியருவி பொழிகின்றாய் !..
என் உயிர்வலியில் ஒரு துளியை
உணர்வாக புனைவாயோ ?

நிலமெல்லாம் நிலவாக
நீ நடந்து செல்கின்றாய் !..
என் கனவெல்லாம் நனவாக
கவியொன்றை சொல்வாயோ?

உலகில் உள்ள கவிகள் எல்லாம்
ஒன்றாய் கூடி, நன்றாய் பாடி
முயன்று பார்த்து தோற்று போயினர்
உன் கண்கள் பேசிய கவிதைகள் கோடி !..

நீயே கவிதைகள் பாடினால் ...

நெடுவனங்கள் சருகாகி
பூவனங்கள் ஆகுமடி ...
கொடும்புலியும் பொன்மானும்
காதல் சொல்லி திரியுமடி ...

இயற்கையை மாற்றாதே
பூமி இங்கு தாங்காதடி ...
காதல் ஒளி கூட்டாதே
சூரியன் மட்டும் போதுமடி ...

ஊற்றெடுத்த முதல்கவியில்
சிறகுகள் முளைக்குதடி !..
முற்றுப்புள்ளி வேண்டாமென
இதயங்கள் துடிக்குதடி !..

- கவி பாடும் என் தேவதைக்கு !

4 மக்கள் கருத்துக்கள்:

kovaikkavi சொன்னது…

''...மழைத்துளிக்கு காத்திருந்தேன்
கவியருவி பொழிகின்றாய் !..
என் உயிர்வலியில் ஒரு துளியை
உணர்வாக புனைவாயோ..''
மிக நல்லாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Premkumar Masilamani சொன்னது…

nandri veda !!!

ராக்கெட் ராஜா சொன்னது…

யார் அந்த தேவதை சார்

Premkumar Masilamani சொன்னது…

:)

Related Posts Plugin for WordPress, Blogger...