Thursday, September 09, 2010

கனவோடு கலைபவளே !!!



என் மார்பில் படுத்து நீ உறங்க
உன் கூந்தல் கோதி நான் கிறங்க
என் விரல்கள் உன்மேல் பயணம் செல்ல
வெட்கி சிவந்து எனை நீ கொல்ல ...

காமன் சூத்திரம் முழுதும் விளங்க
நிலைகள் அறுபதில் உயிரும் கலங்க
உச்ச மோகத்தில் உடல்கள் நடுங்க
காமம் தணிந்தும், காதல் ததும்ப ...

நம் அணைப்பின் இறுக்கத்தில் இரவுகள் கழிய
விண்மீன்கள் நம்மேல் பனியாய் பொழிய
இரவின் முடிவில் என் கனவுகள் கருக
காலைப்பனியாய் நான் தனிமையில் உருக ...

நம் கனவுப்பூக்கள் ஒவ்வொன்றும்
என் கண்ணீர்த்துளியில் நனைகின்றது
நீ இல்லையென்பதை அறியாமல்
மீண்டும் மீண்டும் பூக்கின்றது ...

கனவோடு கலைபவளே,
என் நிஜத்தோடு கலப்பாயோ ?...

4 மக்கள் கருத்துக்கள்:

Raj சொன்னது…

awesome! kalakita po!

Prithvi சொன்னது…

நம் கனவுப்பூக்கள் ஒவ்வொன்றும்
என் கண்ணீர்த்துளியில் நனைகின்றது
நீ இல்லையென்பதை அறியாமல்
மீண்டும் மீண்டும் பூக்கின்றது ...

The above is good. Great way of expressing your situation!!

Sangavi Ananda Kumar சொன்னது…

Unnudan kaalaiyil irukkum tharunathai appen ezhanthalo..Illai um iruvarudan irukum tharunathai ak kaalai ezhanthato.. innum thedugiraen vidai kidaikkamal..

Premkumar Masilamani சொன்னது…

Wowwww Sangavi.. your comment reads like a poem... even I dont know the answer, but I stopped chasing it :)

Related Posts Plugin for WordPress, Blogger...