என்னுயிர் தோழிக்கு.

4 செப்டம்பர் 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

வெள்ளி மழையில் தங்கச்சிலை
யாரை நினைத்து நீராடுதோ ?
நனைத்த துளிகள் மோட்சம் பெற்று
பூமி பந்தை சூடாக்குதோ ?

காதல் வேள்வி செய்யும் பெண்ணின்
இதழும் தேன்துளி சுரக்குதோ ?
பொன்வண்டை தேடி தேடி - இந்த
பூவும் உறக்கம் தொலைத்ததோ ?

பருவம் வந்தால் பூப்பூக்கும்
சாய்ந்து உறங்க துணை கேட்கும்
வாடும் போதும் வாசந்தரும்
பூங்கொடியும் நீயும் ஒன்றல்லவோ !..

முக்கனியில் ஒன்றாய் இருந்தாலும்
கனிந்தபின் தான் கிளி வருமே !
காதல் கூடும் வேளை வரும்
அதுவரை கொஞ்சம் பொறு மனமே !!!…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.