Sunday, October 30, 2011

நெடுஞ்சாலை இரவுகள் ...


விண்ணில் இருந்த தேவதை, மண்ணுக்கு வந்த நேரமோ
கண்ணன் என் மனதினில் பூங்கோதையின் ராகமோ
தன்னந்தனியே நிலவும் வானில் என்ன செய்யுமோ
உன்னைப் பிரிந்த வலியில் தேய்ந்தொழிந்து போகுமோ

ரயில் போகும் பாதையாய் நாமிருவர் செல்ல
கைகோர்க்கும் நேரத்தில் பூ மலரும் மெல்ல
உயிர் திருடும் முயற்சியில் என் கண்கள் வெல்ல
அதையுணர்ந்த கைகள் இடையணைத்து கொள்ள

கைதொடும் தூரத்தில் வெண்ணிலவு இருக்க
நான்தொடும் நேரத்தில் சொர்க்கமது திறக்க
வானவெளி வீதியில் நாமிருவர் மிதக்க
நட்சத்திர சாரலில் பூமிதனை மறக்க

நெடுஞ்சாலை இரவுகள் நம் காதல் சொல்லுதே
புலராத பொழுதுகள் நமைப் எழுப்பி செல்லுதே
தனிமையின் இனிமையில் இருவுயிர் குளிருதே
பனித்துளி ஒன்றிங்கே சூரியனை அணைத்ததே

உயிருள்ள சிற்பமாக,உறையட்டும் இந்த நொடி ...
பூந்தென்றல் வாசமாக, வீசட்டும் நம் காதல் நெடி ...
உயிரை வருடும் உணர்வினில் எல்லாம்
உயிர்த்திருப்போம் அது போதுமடி !...

6 மக்கள் கருத்துக்கள்:

Prithvi சொன்னது…

ரயில் போகும் பாதையாய் நாமிருவர் செல்ல
கைகோர்க்கும் நேரத்தில் பூ மலரும் மெல்ல
உயிர் திருடும் முயற்சியில் என் கண்கள் வெல்ல
அதையுணர்ந்த கைகள் இடையணைத்து கொள்ள.

Out of the all. I like the above lines ..Well explained.

Premkumar Masilamani சொன்னது…

thanks Prithvi

பாலா சொன்னது…

நல்ல கவிதை நண்பரே. நான் இதில் ரொம்ப வீக்கு, கவிதையிலும், காதலிலும்.

Premkumar Masilamani சொன்னது…

உங்களுக்கு-னு ஒரு ஆள் வந்தா தானா strong ஆயிடுவீங்க :)

Sangavi Ananda Kumar சொன்னது…

Romba nalla iruku.. Keep writing prem..

Premkumar Masilamani சொன்னது…

நன்றி சங்கவி... உங்க ஆதரவு இருந்தா தொடர்ந்து எழுதுவேன் :)

Related Posts Plugin for WordPress, Blogger...