Saturday, October 15, 2011

பூக்கள்



பூக்கள் சிரித்து முத்தமிடும்
பூக்கள் மெலிதாய் சத்தமிடும்
பூக்கள் காதலில் உளரும்
பூக்கள் மோதலில் அலறும

பூக்கள் கொதித்து எரியும்
பூக்கள் வெடித்து சிதறும்
பூக்கள் சிவந்து குளிரும்
பூக்கள் குளிர்ந்து மலரும்

பூக்கள் மீண்டும் சிரிக்கும் !...

பூக்களின் சாயத்தை
நடுசாமத்தில் வெளுத்தவளே ...
காமத்தின் ஆழத்தை
கண்மூடி காட்டியவளே ...

நரம்பெல்லாம் புடைக்க
தசையெல்லாம் இறுக்க
உடம்புக்குள் வெடிக்க
மூச்சங்கு அடைக்க
உயிருக்குள் வலிக்க
உதடுகள் சிரிக்க ...

நானறிந்த வித்தையின்
நானறியா பக்கத்தில்
நாம் எழுதிய ஓர் கவிதை
நாளும் சொல்லும் நம் உறவை !...

2 மக்கள் கருத்துக்கள்:

சங்கவி சொன்னது…

ரொம்ப அழகா இருக்கு பிரேம். :)

Premkumar Masilamani சொன்னது…

நன்றி சங்கவி !

Related Posts Plugin for WordPress, Blogger...