Sunday, February 28, 2010
பார்க்க வேண்டும் ஒரு முறை !..
அந்த நீல நிற மேலாடை
இன்னும் வைத்திருக்கிறாயா ?
நான் காதலுரைத்த போது
உன் இதயதுடிப்பை பதிவு செய்ததே ?
முதன் முதலாய் நீ பொய்யுரைத்த போது
மௌனமாய் சாட்சியளித்ததே ?
பிரித்து விட்ட கூந்தல்
பார்க்க மறுத்த கண்கள்
வார்த்தை மறந்த உதடுகள்
கண்ணீரை தடுத்த இமைகள் !..
அனைத்தும் என் கண்ணுக்குள்
நெருப்பாய் என் நெஞ்சுக்குள் !...
எப்படி இருக்கிறாய் நீ?
பார்க்க வேண்டும் ஒரு முறை !..
தேனீக்களை ஏமாற்றிய செவ்விதழ்கள் ..
உன் பேச்சுக்கு தாலாட்டும் லோலாக்கு ..
ஒப்பனை அறியாத பால் முகம் ..
அதில் குங்குமப்பூவாய் சில மச்சம் ..
பார்க்க வேண்டும் ஒரு முறை !..
அமுதத்தை அள்ளி தந்தாலும்
குழந்தை தாய்ப்பாலுக்கு அழுவது போல் ...
சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தாலும்
நெஞ்சம் உனை காண ஏங்குதே ...
பார்க்க வேண்டும் ஒரு முறை !..
என் கண்கள் என்ன குற்றம் செய்தது ?
உன்னை பார்க்க தவமிருந்ததை தவிர !
வரம் தருவாயோ, உன்னை பார்ப்பதற்கு ?
ஒரு நொடி போதும், நூற்றாண்டுகள் வாழ்வேன் !
பார்க்க வேண்டும் ஒரு முறை !..
தொகுப்புகள்:
கவிதை,
காதல்
3
மக்கள் கருத்துக்கள்
Saturday, February 27, 2010
என் பெயர் !... உன் குரல் !...
கோடி முறை கேட்டிருப்பேன்
என் பெயரை ...
இன்று மட்டும் இனிக்குதே !...
புன்னகை பூக்கும் பூவிதழில்
என் பெயரும் பூத்ததே !...
இன்னொரு முறை சொல்லாதே
எறும்புகள் என்னை மொய்க்கின்றன !...
அவள் உஷ்ணத்தை உணராமல்
குழலை நுகராமல்
இதழை வருடாமல்
செவிக்கு மட்டும் அதிர்ஷ்டம் !..
தொலைபேசி ஒழியட்டும் !..
அறிவியல் அழியட்டும் !..
யுகம் யுகமாய் காத்திருந்து
பிறந்தது மனித இனம் ...
தினம் தினமாய் காத்திருந்து
கேட்கிறது என் மனம் ...
என்னாகுமோ !..
மறுக்கும் சொல்லில் உன் காதல்
மறுக்க முடியாமல் தவிக்குதே !..
இனிக்க கேட்ட உன் குரல்
மீண்டும் மீண்டும் ஒலிக்குதே !..
கவிக்கு சொந்தக்காரி
கவிதையை படித்ததால்
கவிஞன் மனதில்
இன்னொரு கவிதை !
நேற்றைய கவிதை தகித்தது !
இன்றைய கவிதை இனிக்குது !
நாளைக்கும் கவிதை பூக்குமோ ?
கவியின் குரல் உனக்கு கேட்குமோ ?
தொகுப்புகள்:
கவிதை,
காதல்
3
மக்கள் கருத்துக்கள்
Friday, February 26, 2010
மீண்டும் நீ வேண்டும் நண்பா !!!
உயிரை உருக்கும் கலை
பெண்களுக்கென்று நினைத்திருந்தேன்
தவறென்று நிரூபித்தாய் ...
என்னை முற்றிலும் அறிந்தவர்கள்
முடிவு வரை இருப்பார்கள் என்றிருந்தேன்
தவறென்று நிரூபித்தாய் ...
காலங்கள் காயங்கள் ஆற்றும்
மாதங்கள் மனதை மாற்றும் என்றிருந்தேன்
தவறென்று நிரூபித்தாய் ...
நீ பேச மறுத்த இரவுகள்
உன் பாசத்தை பேசுகின்றன ...
நீ சிரிக்க மறந்த நிமிடங்கள்
என் வாழ்நாளில் குறைந்தன ...
எனக்காக ஓடி வருகிறாய்
மௌனத்தால் கொன்று செல்கிறாய் ...
வருவதால் உனை அழைப்பதா ?
கொல்வதால் உனை தடுப்பதா ?
நான் செய்ததென்ன ?
நட்பின் கொலையா ?
உண்மையின் விலையா?
அரிச்சந்திரனுக்கு வந்தது
என்னுடைய நிலையா?
இல்லாத காயங்கள் ஆற முடியாது
சொல்லாத சோகங்கள் தீர முடியாது !
நட்பை மறுக்கும் காரணம் தெரியும்
உன் ஊகம் தவறு - எப்போது புரியும் ?
மீண்டும் நீ வேண்டும்
மீண்டு வர வேண்டும்
காத்திருக்கிறேன் ...
நட்புடன் நட்புக்காக !
தொகுப்புகள்:
கவிதை,
நட்பு
2
மக்கள் கருத்துக்கள்
Wednesday, February 24, 2010
தேசபற்று !!!
என் தாயின் கருவறையில்
கோடுகள் கிழித்து ரணமாக்கிவிட்டு
பெயர் வைத்தார்கள் ...
தேசபற்று !!!
பெற்ற குழந்தை பசியில் அழும்போதும்
காவல் நாய்க்கு சோற்றை வைக்கும் கடமை
தேசபற்று !!!
மொத்தமும் நமக்காக இருக்கும்போது
மிச்சதுக்காக அடித்துக்கொள்ளும் அவலம்
தேசபற்று !!!
ஒன்றாய் இருந்தோம் கருவறையில்
கிழித்து பிறந்தோம் விடுதலையில்
தாயின் இரத்தம் கணக்கில் இல்லை
பிள்ளைகளின் யுத்தம் முடியவில்லை
ஆயுதங்களாய் அழியும் செல்வத்தில்
பூமியில் சொர்க்கங்கள் படைக்கலாம் ...
குருதி சிந்தும் யுத்தங்களை
அன்பு சிந்தும் முத்தங்களாக்கலாம் ...
இரத்தம் தோய்ந்த எல்லைகோடுகளில்
பூக்காடுகள் வளர்ப்போம் !
துப்பாக்கி சுமக்கும் இயந்திரங்களை
மனிதர்கள் ஆக்குவோம் !
தேசங்களை துறப்போம், நேசங்களை வளர்ப்போம்
எல்லைகளை மறப்போம், விண்ணுலகில் பறப்போம்
புதிய உலகம் உருவாக, பிரளயங்கள் தேவையில்லை
தேசங்கள் தாண்டி காதல் செய்வோம் !...
நான் தமிழனல்ல
நான் இந்தியனல்ல
பட்டங்களை துறந்து
பாடி திரியும் பறவை நான் !..
என்னோடு வாருங்கள் ...
பறந்து திரியலாம்
சிரித்து மகிழலாம்
ஆனந்தமாய் வாழலாம்
நிம்மதியாய் இறக்கலாம் !...
தொகுப்புகள்:
கவிதை,
தேசப்பற்று
7
மக்கள் கருத்துக்கள்
Friday, February 19, 2010
நீ ...
என் இரவினில் கவிதைகள்
பகலினில் கனவுகள்
இரண்டிலும் அழகாய்
நீ ...
என் படுக்கையில் முட்கள்
தலையணை முத்தம்
முரட்டுத்தனமான மென்மை
நீ ...
சாரல் மழைக்கு ஏங்கும்
துளி பட்டவுடன் சுருங்கும்
தொட்டால்சினுங்கி
நீ ...
என் தரிசு நிலம் பூக்கின்றது
ஒரு துளி மழை இல்லாமல்
பறக்கும் பட்டாம்பூச்சியாய்
நீ ...
உயிர் கொடுத்த தாய்மை
உயிரை வாங்கும் காதல்
இருதலைகொள்ளி எறும்பாய்
நீ ...
கண்டும் காணாதிருக்க
பார்த்தும் பேசாதிருக்க முயல்கிறாய்
நடிக்கத் தெரியாத நங்கை
நீ ...
காதலை அறியாதவன்
காவியம் படைக்கிறேன்
நான் பிரம்மனாகிய காரணம்
நீ ...
கல்லில்லாமல் உளியில்லாமல்
சிற்பமொன்று வடிக்கிறேன்
என்னுள் பதிந்த ஓவியம்
நீ ...
என் கவிதையின் காரணம்
காரணத்தின் பூரணம்
இரண்டுமே ஒன்றாய்
நீ ...
காலையில் நீ
மாலையில் நீ
கண்ணுறங்கா துயரில் நீ
கண்கொள்ளா கனவில் நீ
என் வசந்த காலமும் நீ
என் இலையுதிர் காலமும் நீ
கோடையில் இளநீர் நீ
குளிரில் தேநீர் நீ
குழந்தையின் சிரிப்பில் நீ
அன்னையின் அணைப்பில் நீ
ஏழையின் சந்தோஷம் நீ
பிரிவின் துயரம் நீ
உனக்குள் நான்?
என்னை அழவைத்த கேள்வியும் நீ.
கேள்வியின் பதிலும் நீ.
வா...
காதலின் உச்சத்தை
காமத்தின் எச்சத்தை
நம்முடைய மிச்சத்தை
உணரலாம் ...
தொகுப்புகள்:
கவிதை,
காதல்
2
மக்கள் கருத்துக்கள்
Wednesday, February 17, 2010
எப்படி சொல்வேன் உனக்கு?
ஏன்?.. எதற்கு?.. எப்படி?..
இவற்றை மீறி,
எந்த கருத்தும் என் கருத்துடன் ஒன்றியதில்லை ...
காதல் எப்படி நுழைந்தது?
விடை தெரியவில்லையே... நீ கேட்டபோது !
என் மனம் புரியவில்லையோ... நான் விழித்த போது !
எப்படி சொல்வேன் உனக்கு?
கள்ளமில்லா பிள்ளை சிரிப்பில்
உள்ளம் கொள்ளை போனதடி ...
வெட்டி பேசும் வெள்ளை பேச்சில்
என் கர்வம் தோற்று போனதடி ...
சிரிக்கும் உன் கன்னக் குழியில்
என் வீரம் மடிந்து போனதடி ...
இனிக்கும் உன் வளை ஓசையில்
என் இதயம் நின்று போனதடி ...
எப்படி சொல்வேன் உனக்கு?
அறிவின் சிகரமல்ல நீ ...
அழகின் உச்சமல்ல நீ ...
கவி பாடும் குயில் அல்ல நீ ...
தமிழ் போற்றும் குறளல்ல நீ ...
பிறகேன் நீ?
தெரியவில்லை ...
எப்படி சொல்வேன் உனக்கு?
சொல்லி மறுத்திருந்தால், கொன்றிருப்பேன் இதயத்தை
சொல்லாமல் மறுத்ததால், தேடுகின்றேன் காதலை
காத்திருந்தேன் இருபத்தேழு வருடங்கள்
காத்திருப்பேன் எழுநூறு ஜென்மங்கள்
எப்படி சொல்வேன் உனக்கு?
ஜாதியும் மதமும் காரணமா?
நான் ஆதாம் !
நீ ஏவாள் !
ஜாதி மதத்திற்கு மூத்தவர்கள் நாம் ...
எப்படி சொல்வேன் உனக்கு?
மனதில் காதலுடன், இதழில் நட்புடன்
பழக என்னால் முடியவில்லை ...
சொல்லாமல் இருந்திருந்தால்
தினமென் செவிக்குள் உன் சிரிப்பொலி ...
சொல்லி முடித்ததால்
தனிமையில் என் கவி ஒலி ...
எப்படி சொல்வேன் உனக்கு?
நானும் கோவலன் தான்
கண்ணகி உனை காணும் வரை ...
மனம் அறிந்திருக்கவில்லை
தேவதையை காண்பேன் என்று ...
எப்படி சொல்வேன் உனக்கு?
என் பூமி அழகானது ...
நண்பர்கள் அதிகமானார்கள் ...
சொந்தங்கள் இனித்தது ...
ஆனால், மனதின் ஓரமொரு வெற்றிடம் ..
எப்படி சொல்வேன் உனக்கு?
நாம் வீசி விளையாடிய பனிக்கட்டிகள் சொல்லட்டும் என் காதலை ...
நாம் ஏறி களைத்த மலைகள் சொல்லட்டும் என் காதலை ...
உனக்கு மிகவும் பிடித்த பயணங்கள் சொல்லட்டும் என் காதலை ...
எதிரும் புதிருமாய் இருந்த தருணங்கள் சொல்லட்டும் என் காதலை ...
அதிகாலை பனித்துளிகள் உரக்க சொல்லட்டும் என் காதலை ...
உன் முகம் காட்டும் கண்ணாடி இனிக்க சொல்லட்டும் என் காதலை ...
கர்வமழிந்து உன் கூந்தலேறும் ரோஜாக்கள் சொல்லட்டும் என் காதலை ...
என் மனதை திருடிய உன் வளையல்கள் சொல்லட்டும் என் காதலை ...
உன் காலடிக்காக காத்திருக்கும் செருப்புகள் சொல்லட்டும் என் காதலை ...
நீ பேருந்துக்கு காத்திருக்கும் நிமிடங்கள் சொல்லட்டும் என் காதலை ...
சுட்டெரிக்கும் சூரியனும் இதமாய் சொல்லட்டும் என் காதலை ...
சுகமாய் வீசும் தென்றல், உன் காதில் சொல்லட்டும் என் காதலை ...
நனைத்து விளையாடும் மழைச்சாரல் சொல்லட்டும் என் காதலை ...
முதல் மழையின் மண்வாசம் சொல்லட்டும் என் காதலை ...
இன்று பூத்த காளான்கள் சொல்லட்டும் என் காதலை ...
என்றும் வாழும் மாமரங்கள் சொல்லட்டும் என் காதலை ...
பறந்து திரியும் சிட்டுக்குருவிகள் சொல்லட்டும் என் காதலை ...
நீ கொஞ்சி விளையாடும் நாய்குட்டி சொல்லட்டும் என் காதலை ...
உன் மனதை திருடிய வெண்ணிலா சொல்லட்டும் என் காதலை ...
காதணியாக தவமிருக்கும் நட்சத்திரங்கள் சொல்லட்டும் என் காதலை ...
நான் எப்படி சொல்வேன் உனக்கு என் காதலை ?...
தொகுப்புகள்:
கவிதை,
காதல்
10
மக்கள் கருத்துக்கள்
Sunday, February 14, 2010
இது தான் காதலா?
புகைத்ததுண்டு... புகைப்படத்துடன் பேசியதில்லை ...!
நகைத்ததுண்டு... நடுவீதியில் தனியாக இல்லை ...!
நடித்ததுண்டு ... நட்பினிடத்தில் என்றுமில்லை ...!
வெடித்ததுண்டு... வெட்டுப்பட்டு வந்ததில்லை ...!
சிந்திக்காமல் சிரித்ததுண்டு ...
சிரித்துக்கொண்டே அழுததில்லை ...!
பேசிக்கொண்டே இருந்ததுண்டு ...
மௌனமொழி விளித்ததில்லை...!
விழித்துக்கொண்டே உறங்கியதுண்டு ...
உறங்கமுடியாமல் விழித்ததில்லை ...!
பார்க்காமல் பழகியதுண்டு ...
பழகியபின் தவிர்த்ததில்லை ...!
இது தான் காதலா?
தொகுப்புகள்:
கவிதை,
காதல்
12
மக்கள் கருத்துக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






