Monday, March 01, 2010
ஏனடி அழைத்தாய் ?
ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?
என் கவிதை தடாகத்தில்
அழகாய் பூத்திருந்தேன் !
உன் பிம்பம் விழுமென
நீராய் காத்திருந்தேன் !
கல்லெறிந்து போகிறாய்
கல் நெஞ்சக்காரியோ ?
தெறித்த துளிகளும்
முத்துக்களாய் உனக்காக !
ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?
தொட்டியில் இருக்கும் மீன் நான்
கையில் எடுத்து கொஞ்சுகிறாய் ...
சுவாசமின்றி வாழும் கலையை
எனக்கு கற்று கொடுக்கிறாய் !..
துடிக்கும் போது இனிக்கும் ...
இனிக்கும் போது வலிக்கும் ...
வலிக்கும் போது சிரிக்கும் ...
விந்தையை நீ அறிவாயோ ?
ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?
கார்மேகம் சூழ்ந்ததென
நெடுவனம் தான் வருந்துமோ ?
பூந்தென்றல் வீசுதென
பூக்களும் தான் புலம்புமோ ?
காதலன் கொஞ்சுகையில்
காதல் மனம் கெஞ்சுமோ ?
இயற்கையின் விதி புரியாதோ ?
காதலின் சதி தெரியாதோ ?
பேதை பெண்ணே !
நான் காதலிப்பது
எனக்காக அல்ல
நமக்காக !...
இல்லையென்று கேட்பதற்கு
இல்லாமலே போகலாம் !...
இதற்காகவா அழைத்தாய் ?
எனை இதற்காகவா அழைத்தாய் ?
ஆழ பதிந்து விட்டாய்
இனி மீள முடியாது !
எனை இரண்டாய் பிளந்தாலும்
உன் நினைவு அகலாது !..
உலகத்தின் உச்சியில் உன் பெயரை
உரக்க சொல்ல வேண்டும் !
விரகத்தின் உச்சியில் எனை நீ
கட்டியணைத்து கொள்ள வேண்டும் !
இதிகாச காதல்கள் நம்முன்
மண்டியிட வேண்டும் !
புதிதாக காதல்கள் நாம்
கண்டு உணர வேண்டும் !...
நீ 'உம்' எனும் அக்கணம்
உலகத்துக்கு
புதியதோர் காதலர் தினம் !
உலகமே காத்திருக்கிறது
புத்தம் புது
காதலுக்காக !!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

9 மக்கள் கருத்துக்கள்:
Prem.. really really tell us who the girls.... did u show ur poems to her :) ..
dei.. unmaya sollu.. ethathu book-a pathu copy adikriya illa romba naal-a ezhuthi podama irunthiya?
Loved the 6th para..
nice one...
Ketukonga tamil music directors.. there s a budding poet amidst us !!
/* என் கவிதை தடாகத்தில்
அழகாய் பூத்திருந்தேன் !
உன் பிம்பம் விழுமென
நீராய் காத்திருந்தேன் ! */
Beautiful!!
/*கார்மேகம் சூழ்ந்ததென
நெடுவனம் தான் வருந்துமோ ?
பூந்தென்றல் வீசுதென
பூக்களும் தான் புலம்புமோ ? */
Powerful lines!! Excellent!! Initially, I thought, Puyal (Storm) would apt, instead of puthenral (breeze), but later reading multiple times, you are right mate!! Double Cheers!!
/* உலகமே காத்திருக்கிறது
புத்தம் புது
காதலுக்காக !!! */
This week, you need to present this poem to your Nayana thara!!
நீ 'உம்' எனும் அக்கணம்
உலகத்துக்கு
புதியதோர் காதலர் தினம் !
Machan ethu koncham over da.. You give me that giril no .. we will speak for you .. poratha patha ni kavitha paithiyam akiduva pola eruku????
*/"ஆழ பதிந்து விட்டாய்
இனி மீள முடியாது !
எனை இரண்டாய் பிளந்தாலும்
உன் நினைவு அகலாது !.."/*
கலக்கிடிங்க தலைவா, உண்மையான வரிகள், அத்தகைய அன்பை அனுபவித்தால் மட்டுமே இப்படி எல்லாம் சொல்ல முடியும்.
நன்றி மகேந்திரன் !!!
கருத்துரையிடுக