Sunday, February 28, 2010

பார்க்க வேண்டும் ஒரு முறை !..



அந்த நீல நிற மேலாடை
இன்னும் வைத்திருக்கிறாயா ?

நான் காதலுரைத்த போது
உன் இதயதுடிப்பை பதிவு செய்ததே ?
முதன் முதலாய் நீ பொய்யுரைத்த போது
மௌனமாய் சாட்சியளித்ததே ?

பிரித்து விட்ட கூந்தல்
பார்க்க மறுத்த கண்கள்
வார்த்தை மறந்த உதடுகள்
கண்ணீரை தடுத்த இமைகள் !..

அனைத்தும் என் கண்ணுக்குள்
நெருப்பாய் என் நெஞ்சுக்குள் !...

எப்படி இருக்கிறாய் நீ?
பார்க்க வேண்டும் ஒரு முறை !..

தேனீக்களை ஏமாற்றிய செவ்விதழ்கள் ..
உன் பேச்சுக்கு தாலாட்டும் லோலாக்கு ..
ஒப்பனை அறியாத பால் முகம் ..
அதில் குங்குமப்பூவாய் சில மச்சம் ..

பார்க்க வேண்டும் ஒரு முறை !..

அமுதத்தை அள்ளி தந்தாலும்
குழந்தை தாய்ப்பாலுக்கு அழுவது போல் ...
சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தாலும்
நெஞ்சம் உனை காண ஏங்குதே ...

பார்க்க வேண்டும் ஒரு முறை !..

என் கண்கள் என்ன குற்றம் செய்தது ?
உன்னை பார்க்க தவமிருந்ததை தவிர !
வரம் தருவாயோ, உன்னை பார்ப்பதற்கு ?
ஒரு நொடி போதும், நூற்றாண்டுகள் வாழ்வேன் !

பார்க்க வேண்டும் ஒரு முறை !..

3 மக்கள் கருத்துக்கள்:

Joselin R சொன்னது…

Prem...
Romba azhakaa emotions a capture panniirukeenga...
super.. poem....
Guess this is my favourite...
ie: as of now... :-)

Premkumar Masilamani சொன்னது…

thanks josy... this picture is very special in this poem...

Mandy சொன்னது…

Dude.... whos this girl in ur life !!! :) amaaazing poem... very very very very sweet.....

Related Posts Plugin for WordPress, Blogger...