Friday, February 19, 2010
நீ ...
என் இரவினில் கவிதைகள்
பகலினில் கனவுகள்
இரண்டிலும் அழகாய்
நீ ...
என் படுக்கையில் முட்கள்
தலையணை முத்தம்
முரட்டுத்தனமான மென்மை
நீ ...
சாரல் மழைக்கு ஏங்கும்
துளி பட்டவுடன் சுருங்கும்
தொட்டால்சினுங்கி
நீ ...
என் தரிசு நிலம் பூக்கின்றது
ஒரு துளி மழை இல்லாமல்
பறக்கும் பட்டாம்பூச்சியாய்
நீ ...
உயிர் கொடுத்த தாய்மை
உயிரை வாங்கும் காதல்
இருதலைகொள்ளி எறும்பாய்
நீ ...
கண்டும் காணாதிருக்க
பார்த்தும் பேசாதிருக்க முயல்கிறாய்
நடிக்கத் தெரியாத நங்கை
நீ ...
காதலை அறியாதவன்
காவியம் படைக்கிறேன்
நான் பிரம்மனாகிய காரணம்
நீ ...
கல்லில்லாமல் உளியில்லாமல்
சிற்பமொன்று வடிக்கிறேன்
என்னுள் பதிந்த ஓவியம்
நீ ...
என் கவிதையின் காரணம்
காரணத்தின் பூரணம்
இரண்டுமே ஒன்றாய்
நீ ...
காலையில் நீ
மாலையில் நீ
கண்ணுறங்கா துயரில் நீ
கண்கொள்ளா கனவில் நீ
என் வசந்த காலமும் நீ
என் இலையுதிர் காலமும் நீ
கோடையில் இளநீர் நீ
குளிரில் தேநீர் நீ
குழந்தையின் சிரிப்பில் நீ
அன்னையின் அணைப்பில் நீ
ஏழையின் சந்தோஷம் நீ
பிரிவின் துயரம் நீ
உனக்குள் நான்?
என்னை அழவைத்த கேள்வியும் நீ.
கேள்வியின் பதிலும் நீ.
வா...
காதலின் உச்சத்தை
காமத்தின் எச்சத்தை
நம்முடைய மிச்சத்தை
உணரலாம் ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

2 மக்கள் கருத்துக்கள்:
"காதலை அறியாதவன்
காவியம் படைக்கிறேன்
நான் பிரம்மனாகிய காரணம்
நீ ..." Machi superb da...
dei engayaoo poittu irukka!!
கருத்துரையிடுக